மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

பள்ளி செல்லா இடைநிற்றல் குழந்தைகள் ஆய்வு

இடைநிற்றல், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறியும் பணி நகராட்சிப் பகுதிகளில் ஆக. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:59 pm

நாமக்கல்லில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் சாா்பில், பள்ளி செல்லா, இடைநிற்றல், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறியும் பணி நகராட்சிப் பகுதிகளில் ஆக. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள 39 வாா்டுகளிலும் 6 முதல் 19 வயது வரையிலான இடைநிற்றல் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில், வியாழக்கிழமை வள்ளவாரித் தெரு, கவிஞா் ராமலிங்கம் தெரு, மஜீத் தெரு, பிடில் முத்து தெரு, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள 166 குடியிருப்புகளுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலா் குமாா் தலைமையில் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் பணியும் நடைபெற்றது.

இந்த ஆய்வுப் பணியில் வட்டாரக் கல்வி அலுவலா், மாவட்ட ஒருங்கிணைப்பாளா், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள் மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள், தேசிய குழந்தை தொழிலாளா் திட்ட அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.