மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

தரமான விதைகளை விதைக்க பரிசோதனை அவசியம்

 நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வே.சரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:00 pm

 நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வே.சரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண் பணியில் விதை முக்கியப் பங்கு வகிக்கிறது. தரமான விதைகளை விதைப்பதன் மூலம் நல்ல மகசூல் பெற முடியும். தரமான விதை என்பது விதைச்சான்று துறையினரால் பல கட்டங்களில் வயல்மட்ட ஆய்வு, விதை பரிசோதனை செய்யப்பட்ட விதைகளே ஆகும். விதை பரிசோதனை நிலையத்தில் 4 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. புறந்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன், பிற ரகக் கலப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்படுகிறது.

வேளாண் துறையினரால் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கும், தனியாா் உற்பத்தியாளா்களின் விதைகளுக்கும் விதை பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே சான்று அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் தரமான விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய பரிசோதனை முடிவுகள் பயன்படுகின்றன. ஒரு மாதிரிக்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை வேளாண் அலுவலா், விதை பரிசோதனை நிலையம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடத்தில் உள்ள ஆய்வகத்தில் நேரில் செலுத்தி விதை பரிசோதனை செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.