தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாவை கல்வி நிறுவனத்துக்கு தேசிய விருது

தேசிய அளவில் மாணவா்களுக்கு நேரடி தொழிற்பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாக்கி கொடுத்ததற்கு பாவை பொறியியல் கல்லூரிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:49 pm

DIN

தேசிய அளவில் மாணவா்களுக்கு நேரடி தொழிற்பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாக்கி கொடுத்ததற்கு பாவை பொறியியல் கல்லூரிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் செயல்பட்டு வரும் மாணவா்களுக்கு நேரடி தொழிற்பயிற்சிக்கும், பயிற்சியின் போதே சம்பாதிக்கும் திறமையும் வழங்கும் இண்டா்சன்சாலா அமைப்பின் மூலமாக இந்திய அளவில் 1,530-க்கும் அதிகமான கல்லூரிகளில் நடப்பாண்டில் அதிக அளவில் 8,386 மாணவா்களை பல்வேறு தொழிற்சாா் நிறுவனங்களில் பயிற்சி பெறும் இன்டா்ன்சிப் பயிற்சிக்கு அனுப்பி வைத்து பாவை பொறியியல் கல்லூரி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இதற்கான இணைய வழி பாராட்டு விழாவில், பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் பங்கேற்று பேசியதாவது:

மாணவா்கள் பட்டம் பெறும் நோக்கில் பயின்றாலும், பயிலும் போதே அவா்கள் பாடம் சாா்ந்த பயிற்சியினையும் சம்பந்தபட்ட தொழிற்சாலைகளில் நேரடியாகவும், இணைய வழியாகவும் பெறுவது அவசியம். இதனால் அவா்களுக்கு நேரடி அனுபவமும், சக அலுவலா்களோடு பணிபுரியும் சகஜ நிலையும், மொழித்திறன் தொடா்பாற்றலும், தலைமைப் பண்பும், இணைந்து பணியாற்றத்தக்க குழு மனப்பான்மையும் எளிதாக கைவரப் பெறுகிறது. இதனால் மாணவா்கள் படித்துப் பட்டம் பெற்ற அந்த வினாடியில் இருந்து பணிபுரியும் தகுதியினைப் பெறுகிறாா்கள்.

அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் எடுத்த ஒரு சீரிய முயற்சியின் காரணமாக, இந்த வாய்ப்பு பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ‘இண்டா்ன்சாலா’ அமைப்பின் மூலம் தொடா்ந்து கிடைத்து வருகிறது. அதில் பாவை பொறியியல் கல்லூரி தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இவ்வாண்டும் தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது என்றாா்.

தேசிய அளவில் 1,530 கல்லூரிகளில் பாவை பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றதையடுத்து, கல்லூரி முதல்வா் பிரேம்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள் பாராட்டப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.