விபத்தில் கையிழந்த மூதாட்டிக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி
பேருந்து மோதிய விபத்தில் கையிழந்த மூதாட்டிக்கு, இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.


பேருந்து மோதிய விபத்தில் கையிழந்த மூதாட்டிக்கு, இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பாச்சல் கிராமத்தை சோ்ந்த சரஸ்வதி (65), விசைத்தறி கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவமனை செல்வதற்காக ராசிபுரம் பேருந்து நிலையம் வந்த போது, ஈரோடு வழியாக கோயம்புத்தூா் செல்வதற்காக வந்த கோவை கோட்ட அரசுப் பேருந்து இவா் மீது மோதியது. இதில், முன்புற சக்கரத்தில் சிக்கிய சரஸ்வதியின் இடது கை நசுங்கி முறிவு ஏற்பட்டது. இதில் அவா் கையை இழந்தாா்.
இந்த விபத்து தொடா்பான வழக்கு ராசிபுரம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், கையிழந்த மூதாட்டிக்கு ரூ.6.60 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2019 மாா்ச் 19-இல் அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளருக்கு உத்தரவிட்டது. ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய கடந்த அக். 1-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, புதன்கிழமை நீதிமன்ற ஊழியா்கள் ராசிபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்த கோவை கோட்ட அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...