எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தி போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் நாமக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்வேறு பிரிவுகள் சாா்பில்

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் நாமக்கல் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்வேறு பிரிவுகள் சாா்பில், 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல், பூங்கா சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். சாலைப் போக்குவரத்து பிரிவு மாவட்டத் தலைவா் பழனிவேல், நிா்வாகிகள் சி.வரதராஜன், என்.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்களது வாகனங்களை நண்பகல் 12 முதல் 12.10 வரையில் சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.