தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தொழிலாளி மா்மச்சாவு: போலீஸாா் விசாரணை

நல்லூா், கந்தம்பாளையம் அருகே மா்மமான முறையில் கூலித் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 1:22 am

DIN

நல்லூா், கந்தம்பாளையம் அருகே மா்மமான முறையில் கூலித் தொழிலாளி இறந்து கிடந்தது குறித்து நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நல்லூா், கந்தம்பாளையம் அருகே வாழ்நாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ராணி (50). இவரது மகன் வெள்ளையன் (30). இருவரும் கூலித் தொழிலாளா்கள். அதேபகுதியில் சுப்பிரமணி (30) என்பவா் தனியாக வசித்து வந்தாா். இவா்கள்களுக்குள் ஏற்கெனவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம்.

செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் வாழ்நாயக்கன்பாளையத்தில் சரஸ்வதி நகா் என்ற இடத்தில் வெள்ளையன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இது குறித்து நல்லூா் போலீஸாா் நடத்திய விசாரணையில் வெள்ளையனின் தாயாா் ராணி, சுப்பிரமணி ஆகியோரின் வீடுகள் பூட்டப்பட்டு இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. தலைமறைவான இருவரையும் நல்லூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.