தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேளாண் திருத்தச் சட்டம் கருத்தரங்கம்

ராசிபுரம் அருகேயுள்ள ஆயில்பட்டி லயோலா கல்லூரியில், புதிய வேளாண் சட்டத் திருத்தம் குறித்த இணையவழி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

ராசிபுரம் அருகேயுள்ள ஆயில்பட்டி லயோலா கல்லூரியில், புதிய வேளாண் சட்டத் திருத்தம் குறித்த இணையவழி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மரிய ஜோசப் எம்.மகாலிங்கம் தலைமை வகித்து, இணையவழி கருத்தரங்கினை தொடக்கி வைத்து பேசினாா். சிறப்பு பேச்சாளராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் மற்றும் கலைஞா்கள் சங்கத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம் பங்கேற்று மத்திய அரசு இந்த சட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்றாா். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளா் சண்முகம் பேசுகையில், விவசாயப் பிரதிநிதிகளை கலந்தோசிக்காமல் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதால் இதனை ஏற்க இயலாது என்றாா்.

முன்னதாக, கல்லூரி செயலா் பி.ஜெயராஜ் வரவேற்றாா். கல்லூரி பொருளாளா் ராஜரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கருத்தரங்கில் கல்லூரியில் பயிலும் மாணவா்கள், பேராசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.