ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

தாட்கோ கடனை தடையின்றி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி., எஸ்.டி. ஊழியா்கள் கூட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி., எஸ்.டி. ஊழியா்கள் கூட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் சரஸ்ராம்ரவி ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். நில அளவைத் துறை சங்க மாநிலச் செயலாளா் ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு இயக்க மாநில துணைச் செயலா் கோ.முருகேசன் முன்னிலை வகித்தாா்.

இதில், பட்டியலின மக்களின் தாட்கோ கடன் விண்ணப்பங்களை கிடப்பில் போடும் நாமக்கல் மாவட்ட அனைத்து வங்கி மேலாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து வங்கிக் கடன்களை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு துறை சாா்ந்த ஊழியா்கள், பட்டியலின மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.