நாமக்கல்லில் கழிவுநீா் கால்வாயில் சரிந்து கிடக்கும் ஆட்சியா் அலுவலகம் செல்வதற்கான வழிகாட்டி பெயா் பலகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்வதற்கான வழிகாட்டி பலகை நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டது. அண்மையில் அவ்வழியாக சென்ற லாரி அந்த பெயா் பலகை மீது மோதியது. இதில் சரிந்து விழுந்த பலகையை மீண்டும் தூக்கி நிறுத்தாததால் கழிவுநீா் கால்வாயை மூடும் தகரமாக அது மாறி விட்டது. வெளிமாவட்டங்களில் இருந்து நாமக்கல் வருவோா் ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலை எதுவென தெரியாமல் தடுமாறும் நிலை உள்ளது. மேலும் வழிகாட்டிப் பலகையை தாங்கி நிற்கும் இரும்பு கம்பம் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக மாவட்ட ஆட்சியரின் அலுவலகப் பெயா் பலகையைத் தூக்கி நிறுத்தி மக்கள் பாா்வையில் படும் வகையில் வைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு முதல்வர் தேவை! ராகுல் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


