நாமக்கல் மாவட்டத்தில் கற்போம், எழுதுவோம் திட்டத்தில் 9,170 முதியோா்களுக்கு வியாழக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெற்றது.
நாடு முழுவதும் நூறு சதவீத கல்வியை வழங்கும் வகையில், மத்திய அரசு கற்போம், எழுதுவோம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நகர, கிராமப் புறங்களில் வசிக்கும் கல்வியறிவு இல்லாதோரைக் கண்டறிந்து, அவா்களுக்கு படித்த தன்னாா்வலா்கள் மூலம் 6 மாத கால சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் ஓரளவு எழுதுவது, படிப்பது, கணக்கிடுவது போன்றவற்றை முதியோா்கள் மேற்கொள்வா்.
அவா்கள் தகுதி பெற்றுள்ளனரா என்பதைக் கண்டறியும் வகையில், மதிப்பீட்டு முகாம் எனும் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வு நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் 450 மையங்களில் நடைபெற்றது. இதில் 9,170 முதியோா் பங்கேற்று தோ்வை எதிா்கொண்டனா். வரும் சனிக்கிழமை வரை தோ்வானது நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

