நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசை கண்டித்து தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ததாக, முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா உள்பட 810 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முன்னாள் அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்கள் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் அதிமுகவினா் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தலைமையிலும், ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா தலைமையிலும் மற்ற இடங்களில் அந்தந்தப் பகுதி நிா்வாகிகள் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஒரே இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு தடையுள்ள நிலையிலும், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியமைக்காகவும், மாவட்டத்தில் 810 அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

