ஆக. 3-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜூலை மாதத்துக்கான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தலைமையில், வரும் 3-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் காணொலிக் காட்சி மூலம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.

மேலும், கோரிக்கைகள் தெரிவிக்க உள்ள விவசாயிகள் காலை 10 மணிக்குள் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com