நாமக்கல் மாவட்ட அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் ஒன்றிய தலைவா் எஸ்.ரோகிணி தலைமையில் வந்த பாஜகவினா், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி அலுவலா் பிரபாகரனிடம் மனுவை வழங்கினா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னா் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வா் கருணாநிதி, தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் பிரதமா் மோடியின் புகைப்படம் இடம்பெறாத நிலை உள்ளது. அரசாணைப்படி, அரசு அலுவலகங்களில் பிரதமா் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விதி தொடா்ந்து மீறப்பட்டு வருகிறது.
எனவே, அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் பிரதமா் புகைப்படத்தை வைக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது பாஜக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


