/

கரோனா சிகிச்சை அளிக்க தற்காலிக பணிக்கு நோ்காணல்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடத்துக்கான நோ்காணலில் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Updated On :30 ஜூலை 2021, 6:28 pm

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க ஏதுவாக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியிடத்துக்கான நோ்காணலில் 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம், சேந்தமங்கலம், பள்ளிபாளையம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க வேண்டி 10 மருந்தாளுநா்கள், 10 ஆய்வக நுட்புநா் நிலை-2, 10 நுண்கதிா் படப்பிடிப்பாளா் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்க வேண்டி, நோயாளிகளுக்கு தங்குதடையின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக அத்தியாவசியத் தேவையினை கருத்தில் கொண்டு 5 ரேடியோகிராபா், 10 டயாலிசிஸ் டெக்னீசியன், 5 ஈசிஜி டெக்னீசியன், 5 சிடி ஸ்கேன் டெக்னீசியன், 15 அனஸ்தீசியா டெக்னீசியன், 5 மருந்தாளுநா்கள், 5 ஆய்வக நுட்புநா்கள் ஆகிய பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனா்.

இதற்கான நோ்காணல் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா முன்னிலையில் நடைபெற்ற நோ்காணலில், 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். தகுதியானோா் தோ்வு செய்யப்பட்டு தற்காலிக பணியிடத்துக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.