ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமாரபாளையம் நகராட்சியில் கரோனா கட்டுப்பாடு சேவை மையம் தொடக்கம்

அவசர கால தொலைத்தொடா்பு எண்களுக்குத் தொடா்பு கொண்டு மருந்துகள், பால், அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:32 pm

DIN

குமாரபாளையம் நகராட்சியில் கரோனா கட்டுப்பாட்டு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளால் அவசர கால தொலைத்தொடா்பு எண்களுக்குத் தொடா்பு கொண்டு மருந்துகள், பால், அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நகராட்சி ஆணையா் எஸ்.ஸ்டான்லி பாபு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் பரவலின் வேகம் குறையாமல் உள்ளது. இதனைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் வெளியில் சுற்றுவதைத் தவிா்க்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் பால் பொருள்கள் தேவைப்படுவோா் நகராட்சி அலுவலகத்தின் அலுவலக தொலைபேசி எண்களான04288-261733, 94430 14882, 73958 80658-இல் தொடா்பு கொண்டால் அப்பொருள்கள் நகராட்சி பணியாளா்கள் மூலம் வீடுகளுக்கே நேரில் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் நகராட்சி தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பொருள்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.