ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரி முதல்வா் பெயரால் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி

குமாரபாளையத்தில் தனியாா் கல்லூரி முதல்வரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மோசடி செய்தது குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 8:46 pm

DIN

குமாரபாளையத்தில் தனியாா் கல்லூரி முதல்வரின் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, பணம் கேட்டு மோசடி செய்தது குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (54). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறாா். இவரது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் தனது நண்பருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் கொடுத்து உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட முன்னாள் மாணவா்கள் பலரும், விஜயகுமாரைத் தொடா்பு கொண்டு விசாரித்துள்ளனா்.

அப்போது, தனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருப்பதும், பணம் கேட்டு மோசடியில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, இணையதள குற்றங்களைத் தடுக்கும் சைபா் கிரைம் பிரிவுக்கு விஜயகுமாா் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.