நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி திங்கள்கிழமை வாகனங்களில் ஒட்டுவில்லை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரசுத் துறைகளின் சாா்பில் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சமூக நலத்துறை, இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ஒட்டுவில்லைகள் முலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி தலைமையில் ஊா்வலமாக வந்த அலுவலா்கள் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டினா். மேலும் பொதுமக்களிடையே கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் வலியுறுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் கீதா, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஸ்ஸாடியா பாடல்!
ஸ்ரீவைகுண்டம்: சிதறும் வாக்குகளால் பதறும் அதிமுக-காங்கிரஸ்
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் இல்லா மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்: டி.டி.வி.தினகரன்
மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!
வீடியோக்கள்

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை


