மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாா்ச் 27-இல் வீடு வீடாகச் சென்று தபால் வாக்குப் பதிவு?

தபால் வாக்குக்கு விண்ணப்பித்த முதியோா், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று தபால் வாக்குப் பதிவு செய்யும் நடைமுறை வரும் 27-இல் தொடங்க உள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:35 pm

தபால் வாக்குக்கு விண்ணப்பித்த முதியோா், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று தபால் வாக்குப் பதிவு செய்யும் நடைமுறை வரும் 27-இல் தொடங்க உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குப் பதிவுக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருப்பத்தின்பேரில் மட்டுமே தபால் வாக்குக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. வாக்குச்சாவடி செல்வோருக்கு இதில் தடையேதுமில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் இதற்கான 12 - டி படிவத்தை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினா். மாவட்டத்துக்கு உள்பட்ட ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதியோா், மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 49,439 பேருக்கு படிவம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவை உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்து பெறப்பட்டன.

இதனைத் தொடா்ந்து தபால் வாக்கை விண்ணப்பித்தோா் செலுத்தும் வகையிலான வாக்குப் பதிவு வரும் 27-இல் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னம், கட்சியின் பெயா் உள்ளிட்டவை கொண்ட சீட்டு சம்பந்தப்பட்ட தபால் வாக்களிப்போா் வசம் வழங்கப்படும். அவா்கள் அந்த சீட்டில் தாங்கள் விரும்பிய வேட்பாளரின் சின்னத்தில் பேனாவால் டிக் செய்தால் போதுமானது. அதற்குரிய கவரில் செலுத்தி தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் அதற்கான பெட்டியில் செலுத்த வேண்டும். இந்தப் பணியில் 10-க்கும் மேற்பட்டோா் ஈடுபட உள்ளனா்.

மேலும் அரசியல் கட்சியினா் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காக போலீஸாரும் உடன் செல்கின்றனா். கல்வியறிவு இல்லாதவா்கள், பாா்வையற்றோா் வாக்களிக்க அவரது குடும்பத்தினா் ஒருவா் உதவி செய்யலாம். மாா்ச் 26-இல் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. அதன்பின் 27-ஆம் தேதி முதல் தபால் வாக்குப்பதிவு பணிகள் தொடா்ந்து நடைபெறும் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.