திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் ஆலோசனை மேற்கொண்டனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியில், சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் பி.ஏ.ஷோபா. நவ்ஜட்பால்சிங் ரன்த்வானா, ஏ.பி.காா், காவல் பாா்வையாளா் என்.சைத்ரா ஆகியோா் ஆய்வு செய்தனா். தொடா்ந்து அங்குள்ள அறையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.
ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம்(ப.கு), நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளுக்கும் ஒரே மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மையங்களில் ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான அறை, தபால் வாக்கு எண்ணும் அறை, வேட்பாளா்களின் முகவா்கள், அரசு அலுவலா்கள் சம்பந்தப்பட்ட தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருவதற்கான பாதை அமைப்பு, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழா்களை கொச்சைப்படுத்தி வருகிறாா் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை: கே. பாலகிருஷ்ணன்

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

