தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராசிபுரத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

முதல்வா் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாகப் பேசியதாக திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராஜாவை கண்டித்து ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:28 pm

DIN

முதல்வா் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாகப் பேசியதாக திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராஜாவை கண்டித்து ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நகர செயலா் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

இதே போல, நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள தொ.ஜேடா்பாளையம் பகுதியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம் தலைமையில் திரளான கட்சியினா் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சந்திரன், நாமகிரிப்பேட்டை பேரூா் செயலா் ரமேஷ், சீராப்பள்ளி நாகசந்திரன், நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத் தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.