ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமாரபாளையத்தில் 14 விசைத்தறிக் கூடங்களுக்கு ‘சீல்’

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறி இயங்கிய 14 விசைத்தறிக் கூடங்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

News image
Updated On :28 மே 2021, 6:52 pm

DIN

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறி இயங்கிய 14 விசைத்தறிக் கூடங்கள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், குமாரபாளையம் நகரப் பகுதியில் விதிகளை மீறி விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருவதாக நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளா் எஸ்.ஸ்டான்லி பாபு தலைமையில் 4 தனித் தனிக் குழுக்கள் நகரில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, தெற்கு காலனி, பாரதி நகா், காவேரி நகா், ஆனங்கூா் ரோடு, மணிமேகலை தெரு உள்பட பல்வேறு பகுதியில் கரோனா தடுப்பு விதிகளை மீறி விசைத்தறிக் கூடங்கள் இயங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, விதி மீறலில் ஈடுபட்ட 14 விசைத்தறிக் கூடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து மூடினா். மேலும், தளா்வற்ற முழு முடக்க விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.