இதுகுறித்த புகாரின்பேரில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமசந்திரன், ஆய்வாளா் நல்லம்மாள் தலைமையில் ஐந்து போ் கொண்ட தனிப் படையினா் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது நிலைய அலுவலா் கரிகாலன், உதவி அலுவலா் உள்ளிட்டவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தீயணைப்பு வாகனம், இருசக்கர வாகனம், அலுவலக மேஜை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரொக்கம் ரூ. 32 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மேலும் ரூ. 2.50 லட்சம் லஞ்சம் பெற்ாகக் எழுதப்பட்டிருந்த குறிப்பு நோட்டும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.