தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாமக்கல் மாவட்டத்தில் 1.16 லட்சம் மரக்கன்றுகள் ஒரே நாளில் நடும் திட்டம்

‘நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல்’ என்ற திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

‘நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல்’ என்ற திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 1.16 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், குருக்கபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தாா். நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எ.கே.பி.சின்ராஜ் முன்னிலை வகித்தாா். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று 1.16 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியினை தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ், பூவரசன், வேம்பு, புங்கன், புளியன், கொன்றை, தாரகை, வன்னி, நாவல், அரசன், தேக்கு, வாகை, பலா, தென்னை, முந்திரி, மா, சப்போட்டா, சில்வா் ஓக், பாலை, ஆலமரம் உள்பட மொத்தம் 1.16 லட்சம் மரக் கன்றுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மு.கோட்டைகுமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ.கே.பாலசந்திரன், வட்டாட்சியா் ப.காா்த்திகேயன், வட்டார வளா்ச்சி அலுவலா் தனபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.