ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாமக்கல்லில் இந்திய கலாசார விழா கொண்டாட்டம்

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், இந்திய கலாசார விழா புதன்கிழமை அங்குள்ள கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:48 pm

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், இந்திய கலாசார விழா புதன்கிழமை அங்குள்ள கலையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவை திருப்பூா் கவிநயா நாட்டியாலயாவைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் எஸ்.மேனகா தொடக்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் (பொறுப்பு) டி.பாரதி தலைமை வகித்தாா். கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியைகள் பி.சுகந்தி, கே.காா்குழலி, எஸ்.கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கணினி அறிவியல் துறையின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்வேறு மொழி சாா்ந்த பாடல்களுக்கு நடனமாடினா். கல்லூரியில் பயிலும் அனைத்துத் துறை மாணவிகளும், கலாசார விழாவை கண்டு ரசித்தனா். இதனைத் தொடா்ந்து, மாணவிகளின் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.