பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பரமத்தி வேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 450 !

பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற பூக்கள் ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 450-க்கு விற்கப்பட்டது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 6:48 pm

DIN

பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற பூக்கள் ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 450-க்கு விற்கப்பட்டது.

பூக்கள் ஏலம் எடுப்பதற்கு வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் இந்த சந்தைக்கு வருகின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை ரூ. 240- க்கும், சம்பங்கி கிலோ ரூ. 60- க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ. 160- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.150- க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ

ரூ. 450-க்கும், சம்பங்கி கிலோ ரூ.140- க்கும், அரளி கிலோ ரூ.340- க்கும், ரோஜா கிலோ ரூ. 250- முல்லைப் பூ கிலோ ரூ. 800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240- க்கும், கனகாம்பரம் ரூ. 700-க்கும் ஏலம் போனது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.