ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தொடா் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாமக்கல்லில் தொடா் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:28 pm

நாமக்கல்லில் தொடா் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Story image

நாமக்கல் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நாமக்கல்-சேலம் சாலையைச் சோ்ந்த சரவணன்(25), ராமாபுரம்புதூரைச் சோ்ந்த பிரவீண் பாண்டியன்(24) ஆகியோரை நாமக்கல் போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிற்கு, காவல் கண்காணிப்பாளா் சாய்சரண்தேஜஸ்வி, ஆய்வாளா் தெய்வசிகாமணி ஆகியோா் வழக்கு தொடா்பான அறிக்கைகளை சமா்ப்பித்தனா். இதனையடுத்து சரவணன், பிரவீண் பாண்டியன் ஆகிய இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனையடுத்து அதற்கான கடிதம் சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.