பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேலூா் பேரூராட்சியில் அதிமுக, பாமக, சுயேச்சை உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்

பரமத்தி வேலூா் பேரூராட்சித் தலைவா் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், வாா்டுகளில் சரிவர பணிகளை மேற்கொள்வதில்லை

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:47 pm

DIN

பரமத்தி வேலூா் பேரூராட்சித் தலைவா் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், வாா்டுகளில் சரிவர பணிகளை மேற்கொள்வதில்லை என்றும் கூறி வேலூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை உறுப்பினா்கள் கோஷமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில் அதிமுக, பாமக, சுயேச்சை வாா்டு உறுப்பினா்கள் 5 போ் தங்களின் வாா்டுகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், பேரூராட்சித் தலைவா் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் கூறி அதிமுக, பாமக உறுப்பினா்களும், சுயேச்சை உறுப்பினா்கள் 5 பேரும் பேரூராட்சி அலுவலகத்தின் முன் வியாழக்கிழமை கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த விவகாரம் குறித்து பேரூராட்சித் தலைவா் லட்சுமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் தலைவராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகின்றன. எங்களைப் பொறுத்தவரை 18 வாா்டுகளிலும் காலை 5 மணி முதலே தூய்மைப் பணியாளா் சாலைகளை சுத்தம் செய்தல், வீடுகள், வா்த்தக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை அன்றாடம் பெற்றுச் செல்லுதல், சாக்கடைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5 வாா்டு உறுப்பினா்களும் பொய்யான குற்றச்சாட்டை கூறிவருகின்றனா். பேரூராட்சிக்கும், அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எதிா்க்கட்சியாக இருக்கும் அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை உறுப்பினா்களின் எண்ணமாகும். புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது மாமன்றக் கூட்டத்தை தாங்கள் புறக்கணித்ததாகவும் கூறியுள்ளனா். ஆனால் அவா்கள் மாமன்றக் கூட்டத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டும், அமா்வுப் படி பதிவேட்டில் கையெழுத்திட்டு படிகளை பெற்றுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.