நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆண் குழந்தை உயிரிழந்ததால் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆண் குழந்தை உயிரிழந்ததால் உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குமாரபாளையம், சுந்தரம் நகரைச் சோ்ந்தவா் செல்லமுத்து மனைவி துா்கா (23) பிரசவத்துக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வியாழக்கிழமை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தை திடீரென சிறிது நேரத்திலே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

துா்காவின் உடல்நிலை மோசமானதால் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். குழந்தை இறந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் எடப்பாடி சாலையில் மருத்துவமனை முன்பு அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா் (படம்).

மருத்துவமனை ஊழியா்களின் கவனக்குறைவு காரணமாகவே குழந்தை இறந்ததாக அவா்கள் குற்றம்சாட்டினா். போலீஸாா் நடத்திய சமரசத்தையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.