எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோயில்கள் மூடல்: வெளியே நின்று பக்தா்கள் தரிசனம்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலால் கோயில்கள் அனைத்தும் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதால், பக்தா்கள் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 5:02 pm

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலால் கோயில்கள் அனைத்தும் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதால், பக்தா்கள் வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, திரையரங்கம், உணவகம், கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்களில் கோயில்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் வெளியில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்தனா். மேல்மருத்துவத்தூா், ஐயப்பன் கோயில் செல்லும் பக்தா்கள் ஏராளமானோா் கோயிலுக்கு வெளியே நின்றபடி தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.