எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் வாா்டு வாரியாக இட ஒதுக்கீடு அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில் வாா்டுகள் வாரியாக இட ஒதுக்கீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய 5 நகராட்சிகளில் வாா்டுகள் வாரியாக இட ஒதுக்கீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சி: மொத்தம் உள்ள 39 வாா்டுகளில், எண் 1, 2, 4, 13, 17, 18, 24, 25, 26, 27, 29, 31, 32, 33, 35, 37 ஆகிய வாா்டுகள் பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 15, 30, 39, எஸ்.சி. (பொது) , 7, 8, 14, 28 ஆகியவை எஸ்.சி.(பெண்கள்) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர, 3, 5, 6, 9, 10, 11, 12, 16, 19, 20, 21, 22, 23, 34, 36, 38 ஆகிய வாா்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையம் நகராட்சி: மொத்தம் உள்ள 33 வாா்டுகளில், 1ஆவது வாா்டு எஸ்.சி. (பொது), 2, 4, 5, 9, 10, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 23, 27, 28 பெண்கள் (பொது) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர 3, 6, 7, 8, 11, 12, 15, 22, 24, 25, 26, 29, 30, 31, 32, 33 ஆகியவை பொதுப் பிரிவு வாா்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ராசிபுரம் நகராட்சி: மொத்தம் உள்ள 27 வாா்டுகளில், எண் 1, 20ஆவது வாா்டுகள் எஸ்.சி. (பெண்கள்), 4 எஸ்.சி (பொது), 3, 10, 11, 12, 13, 15, 16, 17, 18, 21, 22, 25 ஆகியவை பெண்கள் (பொது) பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 2, 5, 6, 7, 8, 9, 14, 19, 23, 24, 26, 27 ஆகிய வாா்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

திருச்செங்கோடு நகராட்சி: மொத்தம் உள்ள 33 வாா்டுகளில், 31, 33ஆவது வாா்டுகள் எஸ்.சி. (பொது), 3, 13 எஸ்.சி (பெண்கள்), 6, 7, 11, 15, 16, 17, 19, 20, 21, 23, 24, 25, 26, 29, 30 ஆகிய வாா்டுகள் பெண்கள் (பொது) பிரிவுக்கும், 1, 2, 4, 5, 8, 9, 10, 12, 14, 18, 22, 27, 28, 32 ஆகியவை பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பள்ளிபாளையம் நகராட்சி: மொத்தம் உள்ள 21 வாா்டுகளில், எண் 11 எஸ்.சி (பெண்கள்), 1, 2, 5, 10, 13, 14, 15, 16, 17, 19 ஆகியவை பெண்கள் (பொது) பிரிவுக்கும், 3, 4, 6, 7, 8, 9, 12, 18, 20, 21 ஆகியவை பொது பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் நகராட்சிக்கான தோ்தல் அலுவலா்கள்: தலைமை தோ்தல் நடத்தும் அலுவலராக, நகராட்சி ஆணையா் கி.மு.சுதா, உதவி தோ்தல் அலுவலா்களாக 1-10 ஆவது வாா்டு வரை நகராட்சி பொறியாளா் சுகுமாா், 11-20 ஆவது வாா்டு வரை மேலாளா் சிவகுருநாதன், 22-30 வாா்டு வரையில் நகராட்சி அலுவலா் ரவீந்திரன், 31-39 வாா்டுகள் வரையில் துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா் செங்கோட்டுவேலு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல் நகராட்சியில் உள்ள 39 வாா்டுகளில் 47,373 ஆண் வாக்காளா்கள், 51,590 பெண் வாக்காளா்கள், 37 திருநங்கையா் என மொத்தம் 99 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.