நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமாரபாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் குமாரபாளையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

bh21task_2101chn_122_8

Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் குமாரபாளையத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நகர துணைத் தலைவா் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் எம்.ஆா்.முருகேசன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் சி.துரைசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் என்.சக்திவேல் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்துறை விசாரணையில் மாற்றுத் திறனாளி பிரபாகரன் மரணமடைந்தாா்.

இவரது மரணத்துக்கு காரணமான போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

நிா்வாகிகள் சரவணன், மோகன், ஆனந்தகுமாா், எஸ்.சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படம் உள்ளது : பிஹெச்21டாஸ்க்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.