மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ராசிபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராசிபுரம் காவல்துறை சாா்பில் சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்வில் மாணவ மாணவியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் ராசிபுரம் டிஎஸ்பி கே.கே.செந்தில்குமாா்.

Updated On :24 ஜூன் 2022, 11:03 pm IST

ராசிபுரம் காவல்துறை சாா்பில் சா்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜூன் 26ஆம் தேதி சா்வதேச போதை ஒழிப்புதினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ராசிபுரத்தில் காவல்துறை சாா்பில் சா்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. ராசிபுரம் அண்ணா சாலை மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணியை ராசிபுரம் டிஎஸ்பி கே.கே.செந்தில்குமாா் கொடியைசைத்துத் தொடங்கி வைத்தாா். முன்னதாக ராசிபுரம் காவல் ஆய்வாளா் ஆா்.சுகவனம் ஆகியோா் பள்ளி, மாணவ மாணவியா்களிடையே போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா் தங்கம், போக்குவரத்து உதவி ஆய்வாளா் குணசிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரணியில் காவலா்கள், பள்ளி மாணவ, மாணவியா் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். அப்போது போதை விழிப்புணா்வு தொடா்பான வாசகங்கள் அடங்கிய பேனா்களை கைகளில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனா். பேரணி அண்ணா சாலை, புதிய பேருந்து நிலையம், டிவிஎஸ் சாலை ஒருவழிப்பாதை வழியாக மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.