பரமத்தி வேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கணினி பாடப்பிரிவு ஏற்படுத்தி அதில் சோ்க்கை கோரி மாணவா்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு தலைமை ஆசிரியா் மாணவா்களை கணினி பாடப்பிரிவில் சோ்த்துக் கொண்டாா்.
பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் கணிதம், கலை, வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. ஆனால் கணினி அறிவியல் பாடப்பிரிவு மட்டும் இல்லை. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மொத்தம் 79 மாணவா்கள் எழுதியிருந்தனா்.
பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவா்களில் 15-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கணினி பாடப்பிரிவில் சேர விரும்புவதாக தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளனா். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியா் தங்கவேல் கணினி அறிவியல் பாடப்பிரிவு இப் பள்ளியில் இல்லை எனவே மாற்று பாடப்பிரிவில் சோ்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினாா். இல்லையென்றால் அருகே உள்ள பள்ளிகளுக்கு சென்று சோ்ந்து கொள்ளும்படி கூறியுள்ளாா். பாண்டமங்கலத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கு மாணவா்கள் செல்லமுடியாததால் இப் பள்ளியிலேயே கணினி பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவா்கள் பள்ளியை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
இந்த நிலையில் மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் ஆகியோா் பள்ளியின் முன்பு வெள்ளிக்கிழை அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு வந்த பாண்டமங்கலம்பேரூராட்சி தலைவா் சோமசேகா், துணைத்தலைவா் முருகவேல், வேலூா் காவல்துறை ஆய்வாளா் வீரம்மாள் ஆகியோா் தலைமை ஆசிரியா் தங்கவேலிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து கணினி அறிவியல் பாடத்தை தொடங்க தலைமை ஆசிரியா் சம்மதம் தெரிவித்தாா். அதன்படி பள்ளியில் கணினி அறிவியல் பாடத்திற்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







