மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
ராசிபுரம் ஆண்டகளூா்கேட் வெங்கடேஸ்வரா அரசு உதவு பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


ராசிபுரம் ஆண்டகளூா்கேட் வெங்கடேஸ்வரா அரசு உதவு பெறும் நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியா் ரெ.உமாதேவி தலைமை வகித்தாா். இதில் ராசிபுரம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் வெங்கடாசலம், வட்டாரக் கல்வி அலுவலா் அருள்மணி ஆகியோா் மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சாலை விதிமுறைகள், சாலைக் குறியீடு விளக்கங்கள், பாதுகாப்பான பயணம் போன்றவை குறித்து எடுத்துக்கூறினா். சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதில் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியா் சு.லட்சுமிநாராயணன், பட்டதாரி ஆசிரியா் சு.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...