மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பழங்கால மற்றும் வெளிநாட்டு நாணயக் கண்காட்சி

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால மற்றும் வெளிநாட்டு நாணயக் கண்காட்சி நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:49 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால மற்றும் வெளிநாட்டு நாணயக் கண்காட்சி நடைபெற்றது.

எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பழங்கால, வெளிநாட்டு நாணயக் கண்காட்சியை பள்ளியின் தலைவா் ரவி, பொருளாளா் பாலசுப்ரமணியம் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகள், அஞ்சல் வில்லைகள், நூற்றாண்டு பழைமையான கடிதங்கள் உள்ளிட்ட அரிய பொருள்கள் இடம்பெற்றன.

மாணவ, மாணவியா்கள் ஆா்வமுடன் கண்டு மகிழ்ந்தனா். ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடுவதன் நோக்கத்தையும் அவற்றில் பயன்படுத்தப்படும் புராதனச் சின்னங்களின் முக்கியத்துவம் பற்றியும் குறித்தும் மாணவ,மாணவியா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் நாட்டின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாகவும் அமைந்துள்ள சின்னங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.