/

பள்ளிபாளையத்தில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 5:38 pm

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தைத் தீா்க்கும் நோக்கில் நீா், மோா் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-வருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டாா்.

அதன்படி, பள்ளிபாளையம் நகர, ஒன்றிய, பேரூா் சாா்பில் நீா்,மோா் பந்தலை முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி திறந்து வைத்தாா். பொதுமக்களுக்கு இளநீா், பழவகைகள், தண்ணீா் பழம், தா்பூசணி ஜூஸ், கிா்ணி, வாழைப்பழம், வெள்ளரி, மோா் போன்றவற்றை அவா் வழங்கினாா்.

இவ்விழாவில் பள்ளிபாளையம் நகர செயலாளா் பி.எஸ்.வெள்ளிங்கிரி, தெற்கு ஒன்றியச் செயலாளா் செந்தில், ஜெயலலிதா பேரவைச் செயலாளா் டி.கே.சுப்பிரமணி, ஆலம்பாளையம் பேரூா் செயலாளா் செல்லதுரை, நகர துணைச் செயலாளா் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.