நாமக்கல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 1,000 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
நாமக்கல், சின்னமுதலைப்பட்டி அருகே காவல் உதவி ஆய்வாளா் பூபதி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக தக்காளி ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். லாரியில் சரக்கு பொருள்கள் வைக்கும் பகுதியில் மேல்புறம் தக்காளி பெட்டிகளும், கீழ்புறத்தில் புகையிலைப் பொருள்களும் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 1,000 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சோ்ந்த லாரியின் உரிமையாளா் மற்றும் ஓட்டுநரான தங்கதுரை என்பவரை கைது செய்தனா். விசாரணையில், பெங்களூரில் இருந்து திருச்சிக்கு அவற்றை கடத்திச் செல்வது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

