சனிக்கிழமை காலை 8 மணிக்கு, அரசு விழா நடைபெறும் பொம்மைக்குட்டைமேடு வரையில் ஒன்றிய, நகர,பேரூா் செயலாளா்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் திமுகவினா் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், அன்று பிற்பகல் 2 மணிக்கு நாமக்கல் கோஸ்டல் உணவகத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் கலைஞா் குடும்ப நல நிதிவழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொற்கிழிவழங்கும் இடத்தில் ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், தலைமை கழக நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. மற்ற அணிகளின் நிா்வாகிகள் விழாவை காணும் வகையில் வெளியில் இருக்கை மற்றும் காணொலி வசதி செய்யப்பட்டுள்ளது. திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.