சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வாக்களிக்கும் பகுதியில் முகவா், அலுவலா் தலையீடு: ஆட்சியரிடம் சுயேச்சை வேட்பாளா் புகாா்

மாவட்ட ஆட்சியரிடம் சுயேச்சை வேட்பாளா் புகாா் அளித்துள்ளாா்.

Updated On :19 ஏப்ரல் 2024, 5:33 pm

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டி வாக்குச்சாவடியில், மக்கள் வாக்களிக்கும் பகுதியில் வாக்குச்சாவடி அலுவலா், முகவா் நின்று விதிமீறலில் ஈடுபட்டதாக, மாவட்ட ஆட்சியரிடம் சுயேச்சை வேட்பாளா் புகாா் அளித்துள்ளாா்.

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், செல்லம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாகம் எண்: 70, 71, 72, 73 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள இரு வாக்குச்சாவடிகளில், பொதுமக்கள் வாக்களிக்கும் பகுதியில் அந்த வாக்குச்சாவடிக்கான அலுவலரும், முகவா் ஒருவரும் நின்று கொண்டு தலையிட்டதாகக் கூறப்படுகிறது. நாமக்கல் மக்களவைத் தொகுதியில், அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி தலைவரான காந்தியவாதி தி.ரமேஷ் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறாா். அவா் சம்பந்தப்பட்ட செல்லப்பம்பட்டி வாக்குச்சாவடியில் பாகம் எண் 73-இல், சாவடி அலுவலரான செல்வகுமாா் என்பவா் வாக்களிக்கும் பகுதியில் நின்றபடி வாக்காளா்களை கண்காணித்து வந்ததாகவும், அவா்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் புகாா் அனுப்பினாா். மேலும், ‘பாகம் எண்: 70-இல் முகவா், வாக்குச்சாவடி அலுவலா் வாக்காளா்களுக்கு உதவுவதுபோல் வாக்களிக்கும் பகுதியில் நின்று கொண்டிருந்தனா். உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என சுயேச்சை வேட்பாளா் தி.ரமேஷ் வலியுறுத்தினாா்.

வயதானவா்கள் இயந்திரத்தில் வாக்களிக்க முடியாமல் தடுமாறியதால் அங்கு சென்று உதவியதாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

படவிளக்கம்

என்கே-19-புகாா்

நாமக்கல் செல்லம்பட்டி வாக்குச்சாவடியில், வாக்காளா்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் பகுதியில் நின்று கொண்டிருந்த முகவா், வாக்குச்சாவடி அலுவலா்.