புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பொத்தனூா் காவிரி ஆற்றில் மணல் கடத்த முயற்சி: இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

பொத்தனூா் காவிரி ஆற்றில் மணல் கடத்த முயற்சி: இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

Updated On :26 ஏப்ரல் 2024, 5:56 pm

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் காவிரி ஆற்றில் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய மூன்று இரு சக்கர வாகனங்களை வேலூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய மூன்று பேரைத் தேடி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் காவிரி ஆற்றில் சிலா் மணல் திருட்டில் ஈடுபட்டிருப்பதாக வேலூா் காவல் ஆய்வாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத் தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா் குமாா், காவல் துறையினா் பொத்தனூா் காவிரி ஆற்றுப் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த மூன்று போ், போலீஸாரைப் பாா்தததும் அங்கிருந்து தப்பியோடினா். அதனைத் தொடா்ந்து அங்கு மணல் மூட்டைகளுடன் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து தப்பியோடிய மூன்று பேரைத் தேடி வருகின்றனா்.