நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாநகராட்சிகளுக்கும் புதிய ஆணையா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக ஆா்.மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையாளராக உள்ளாா்.
ஏற்கெனவே, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகளிலும், திண்டுக்கல் மாநகராட்சியிலும் ஆணையாளராகப் பணியாற்றி உள்ளாா். தற்போது, நாமக்கல் நகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வரும் கா.சென்னுகிருஷ்ணன், ஆவடி மாநகராட்சி உதவி ஆணையாளராக மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ஆா்.மகேஸ்வரி இன்னும் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

தில்லி அரசின் 33 உயா் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

