இந்த நிலையில், லோகநாதன் வங்கி கணக்கிற்கு 2023, நவ.7-இல் அவா் செலுத்திய வைப்புத் தொகை ரூ. 3 லட்சம் மட்டும் வந்து சோ்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவரும், நீதிபதியுமான வி.ராமராஜ், உறுப்பினா்கள் ஆா்.ரமோலா, என்.லட்சுமணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தனா். அதில், மின்வாரியத்தின் சேவை குறைபாடு உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, லோகநாதனுக்கு சம்பந்தப்பட்ட மின்வாரியம் 9 சதவீத வட்டியையும், அவருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காக ரூ. 50 ஆயிரம், செலவுத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.