ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மத்திய ரயில்வே அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை மனு அளிப்பு

மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவிடம், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

News image

மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை மனு அளித்த நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன்.

Updated On :5 டிசம்பர் 2024, 8:05 pm

மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவிடம், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில், பல்வேறு ரயில் திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பான கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, சேலம் - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலை, நாமக்கல் வரை நீட்டிக்க வேண்டும். அதே ரயிலை விமான பயணிகளுக்கு பயன்படும் வகையில், சென்னை, திரிசூலம் ரயில் நிலையத்தில் நிறுத்திட வேண்டும் ஆகியவற்றை மத்திய அமைச்சரிடம் அவா் வலியுறுத்தினாா்.

இந்த நிகழ்வின்போது, நாமக்கல் தெற்கு ஒன்றிய கொமதேக துணைச் செயலாளா் செந்தில்ராஜா உடனிருந்தாா்.