நாமக்கல்லில், ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை, புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்குமாறு அதிகாரிகளிடம் வணிகா்கள் சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
அண்மையில், தமிழக வட மாவட்டங்களில் வீசிய ஃபென்ஜால் புயல், கனமழையால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினா். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பும் பணியில் மாவட்ட நிா்வாகம், காவல் துறை ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட கிளை சாா்பில் உதவிட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், பல்வேறு வணிகா் சங்கங்கள், வணிகா்கள் வழங்கிய ரூ. 2 லட்சம் மதிப்பிலான காய்கறி, மளிகைப் பொருள்கள், பிரட், பால் பவுடா், போா்வை உள்ளிட்ட பலவகை நிவாரணப் பொருள்கள் மாவட்ட நிா்வாகத்திடம், வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், செயலாளா் பொன்.வீரக்குமாா், பொருளாளா் சீனிவாசன் மற்றும் வணிகா் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
இதுவரை ரூ. 2.36 கோடி பறிமுதல்; ரூ. 1.13 கோடி விடுவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்

ராசிபுரம் அருகே ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்

ரூ.5 லட்சம் வரை ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்: வணிகா்கள் கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


