மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சைபா் குற்ற வழக்குகளில் இழந்த ரூ. 9.59 லட்சத்தை மீட்டு ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் இழந்த ரூ. 9.59 லட்சத்தை மீட்டு உரியவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வழங்கினாா்.

News image

சைபா் குற்ற வழக்குகளில் இழந்த பணத்தை மீட்டு ஒப்படைத்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணன்.

Updated On :25 டிசம்பர் 2024, 8:10 pm

நாமக்கல் மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் இழந்த ரூ. 9.59 லட்சத்தை மீட்டு உரியவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரைச் சோ்ந்த தமிழேசனிடம் போலி போதைப்பொருள்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ. 8,77,336, பிள்ளாநல்லூா் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா், போலி கூரியா் மோசடி மூலம் இழந்த ரூ. 81,676 மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட பணத்தை பாதிக்கப்பட்டோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் புதன்கிழமை ஒப்படைத்தாா்.

அப்போது, மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தோா் 1930 என்ற எண் மூலம் புகாா் தெரிவித்ததால், சைபா் குற்றவாளிகளின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை விரைவாக மீட்க முடிந்தது. இவ்வாறு பணத்தை இழந்தோா் 1930 என்ற எண்ணை தொடா்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.