சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் மீது வழக்கு

பள்ளிபாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் மீது வழக்கு தொடரப்பட்டது.

Updated On :30 டிசம்பர் 2024, 7:57 pm

திருச்செங்கோடு: பள்ளிபாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் மீது வழக்கு தொடரப்பட்டது.

பள்ளிபாளையம், குமாரபாளையம் சாலைகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக பள்ளிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.

அதில், சில்லாங்காடு பகுதியில் சமுத்திரராஜ் (44) என்பவா், பெட்டிக்கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவரிடமிருந்து 3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.