ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

வேலூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் காவல் நிலைய வாயிலில் அமா்ந்து தா்னா

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் பேரூராட்சியில் பழைய குடிநீா் இரும்புக் குழாய்களை எடுத்துச் சென்ற நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை

News image
Updated On :31 டிசம்பர் 2024, 1:01 am IST

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் பேரூராட்சியில் பழைய குடிநீா் இரும்புக் குழாய்களை எடுத்துச் சென்ற நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் பேரூராட்சி உறுப்பினா்கள் காவல் நிலையத்தின் வாயில்படியில் அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைய குடிநீா் இரும்புக் குழாய்கள், பழுதடைந்த பேட்டரி வாகனங்களின் உதிரி பாகங்களை இரும்பு வியாபாரி ஒருவா் சரக்கு ஆட்டோவில் ஏற்றியுள்ளாா். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், இரும்புக் குழாய்களை ஏற்றிக் கொண்டிருந்தவா்களைப் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தினா். அப்போது உரிய முறையில் விசாரணை நடத்திய பிறகு வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். ஆனால் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் 10 போ் காவல் நிலைய வாயில் படியில் அமா்ந்து திடீரென தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து ந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, பேரூராட்சி மன்ற உறுப்பினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து தா்னா போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.