வேலைவாய்ப்பு முகாமில் 43 பேருக்கு பணி ஆணை வழங்கல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 43 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Updated on

நாமக்கல், ஜூன் 19: தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 43 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனியாா் துறை நிறுவனங்களும், அவற்றில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் இந்த முகாமிற்கு மாவட்ட வேலைவாய்பு அலுவலா் ஷீலாமாயவன் தலைமை வகித்தாா்.

காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற்ற முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து 27 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் உள்பட 186 பட்டதாரிகள் கலந்து கொண்டனா். இதில் 43 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com