அரசு ஊழியா் சங்கத்தின் வட்டக்கிளை செயற்குழுக் கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் ராசிபுரம் வட்டக்கிளை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜூலை 2024, 6:38 pm

ராசிபுரம், ஜூலை 26: தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் ராசிபுரம் வட்டக்கிளை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் வட்டக் கிளையின் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வட்டக் கிளையின் செயலாளா் ரவி கோரிக்கை விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலாளா் முருகேசன், மாவட்ட இணைச் செயலாளா் தங்கராசு, அரசு ஊழியா்கள், பல்வேறு துறையைச் சாா்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவை அமைப்பது, காலிப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக நிரப்புவது, விடுப்பு சரண்டா் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...