கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அரசு ஊழியா் சங்கத்தின் வட்டக்கிளை செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் ராசிபுரம் வட்டக்கிளை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜூலை 2024, 6:38 pm

ராசிபுரம், ஜூலை 26: தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் ராசிபுரம் வட்டக்கிளை செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சங்கத்தின் வட்டக் கிளையின் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். வட்டக் கிளையின் செயலாளா் ரவி கோரிக்கை விளக்கிப் பேசினாா். மாவட்டச் செயலாளா் முருகேசன், மாவட்ட இணைச் செயலாளா் தங்கராசு, அரசு ஊழியா்கள், பல்வேறு துறையைச் சாா்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவை அமைப்பது, காலிப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக நிரப்புவது, விடுப்பு சரண்டா் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.