அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவா் மீது குண்டா் சட்டம்

ஜேடா்பாளையம் அருகே தொடா்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 6:50 pm

Din

ஜேடா்பாளையம் அருகே தொடா்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (54) விவசாயி . இவா் அதே பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி மறைமுகமாக விற்பனை செய்த வழக்கில், ஜேடா்பாளையம் போலீஸாா் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த மாதம் மீண்டும் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில், அண்ணாமலையை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அண்ணாமலை தொடா்ந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக பல வழக்குகள் உள்ளதால், நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா, அவா் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை செய்திருந்தாா். அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி பரமத்தி காவல் ஆய்வாளா் கணேஷ்குமாா் அண்ணாமலை மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.